செல்போனை தந்தை பறித்ததால் பிளஸ் 1 மாணவி தற்கொலை

சேலம், ஜூன் 5: சேலம் வீராணம் பாலாஜி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் யுவசக்தி(17). சேலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 முடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த யுவசக்தி, செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தாய், ஒரு வேலையும் செய்யாமல் செல்போனிலேயே விளையாடுகிறாயா? என எச்சரிக்கை செய்து விட்டு சென்றார். அவரது தந்தை குமார், செல்போனை பறித்து விட்டு சென்றுவிட்டார்.இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான யுவசக்தி, நேற்றுமுன்தினம் பகல் 2 மணிக்கு வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை