திருவனந்தபுரம்: தான் பலாத்காரம் செய்யப்பட்ட போது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நடிகர் திலீப் பார்த்ததாக அவரது நண்பர் வெளியிட்ட தகவலை தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை, முதல்வர் பினராய் விஜயனிடம் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான ஒருவர் கடந்த 5 வருடங்களுக்கு முன் திருச்சூரிலிருந்து காரில் கொச்சிக்கு செல்லும் வழியில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது முன்னாள் டிரைவரான சுனில் குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடிகர் திலீப்பும் கைதாகி ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் திலீப்பின் நண்பரும், மலையாள டைரக்டருமான பாலச்சந்திரன் என்பவர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அப்போது நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை திலீப் உள்பட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்தது தனக்கு தெரியும் என்று அவர் கூறியிருந்தார். இந்த தகவலை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் பலாத்கார காட்சிகளை நடிகர் திலீப் பார்த்ததாக அவரது நண்பரே கூறியுள்ளார். எனவே இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்….