செரியலூரில் பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி

புதுக்கோட்டை: கீரமங்கலம் செரியலூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் செரியலூர் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி நடந்தது. இந்த போட்டியில் கீரமங்கலம், வடகாடு, மேற்பனைக்காடு, அறந்தாங்கி, அன்னவாசல் அரசு பள்ளி மாணவர் அணிகள், புதுக்கோட்டை தனியார் பள்ளி அணி என 6 அணிகள் பங்கேற்றது. இதில் வடகாடு அரசு பள்ளி மாணவர் அணியினர் அதிக புள்ளிகளைப் பெற்று முதல் பரிசையும், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் இரண்டாவது பரிசும், மேற்பனைக்காடு, அன்னவாசல் அரசுப்பள்ளி மாணவர்கள் அணிகள் 3வது பரிசையும் பெற்றனர். பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்களில் பங்கேற்ற 2 அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ள அணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளை கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினார்கள். இந்த போட்டி எங்களுக்கு ஒரு பயிற்சியாக உள்ளது என்றனர் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு