சென்னை விமான நிலையத்தில் ரூ.55.76 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த 127 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தனர்.அப்போது, சென்னையை சேர்ந்த 3 பயணிகள் ஒரே குழுவாக இலங்கை செல்ல வந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்களது பைகளில  ரகசிய அறை வைத்து, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் இருந்து மொத்தம் ₹55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரின் பயணத்தை ரத்து செய்து, விசாரணை நடத்தினர். அதில், இந்த கரன்சிகளை இலங்கைக்கு கடத்தி சென்று, அங்கிருந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இந்த கரன்சியை அவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார் என்று சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்….

Related posts

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து 14.5 லட்சம் கொள்ளை!

செய்யாறில் இன்று திருமணம் நடக்க இருந்தது காஞ்சிபுரம் சென்ற மணப்பெண் கடத்தலா?

பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு