சென்னை: சென்னையில் இருந்து இலங்கை செல்லும் லங்கன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த 127 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளே அனுப்பிக்கொண்டு இருந்தனர்.அப்போது, சென்னையை சேர்ந்த 3 பயணிகள் ஒரே குழுவாக இலங்கை செல்ல வந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், அவர்களது பைகளில ரகசிய அறை வைத்து, கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் இருந்து மொத்தம் ₹55.76 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேரின் பயணத்தை ரத்து செய்து, விசாரணை நடத்தினர். அதில், இந்த கரன்சிகளை இலங்கைக்கு கடத்தி சென்று, அங்கிருந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இந்த கரன்சியை அவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார் என்று சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்….