சென்னை பெண்ணிடம் ரூ.50 லட்சம் நிலமோசடி

மதுரை: சென்னையை சேர்ந்த பெண்ணிடம் ரூ50 லட்சம் மதிப்புள்ள நில மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை, அம்பத்தூர் வெங்கடபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குறள். இவரது மகள் இந்திரா முத்துமீனா. இவருக்கு மதுரையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளிட்ட நிலங்கள் உள்ளன. அவற்றை மதுரையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து, அவரது உறவினருக்கு விற்று உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அவர் நகர் நிலஅபகரிப்பு பிரிவில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது