சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமியை தொடர்ந்து அடுத்தடுத்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 190 விமானங்கள் இயக்கப்பட்டு புறப்பாடு, வருகை பயணிகள் 15 ஆயிரமாக இருந்தது.நேற்று 213 விமானங்களாக அதிகரித்து புறப்பாடு, வருகை பயணிகள் 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 23 விமானங்களும் 5 ஆயிரம் பயணிகளும் அதிகரித்துள்ளது. இன்று பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உள்நாட்டு விமான கட்டணங்களில் திடீர் உயர்வு பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. …