சென்னையில் வரும் 31ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடத்த தடை

சென்னை: கொரோனா நோய்த்தொற்று பரவலை  தடுக்கும் வகையில் வரும் 31ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, சென்னை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை முன்அனுமதி இன்றி பொது இடங்களில் கூட்டங்கள் நடத்தவோ மற்றும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் ஒன்று கூடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைமீறி பொது இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது 144 சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் (1.1.2021) முதல் வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்  தெரிவித்துள்ளார்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு