சென்னையில் வருகிற 6ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அண்மையில் அறிவித்தார். போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அறிவித்தார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக வருகிற 6ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கோயம்ேபட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வருகிற 6ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். எனவே, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை