சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்த 16 குழந்தைகள் உட்பட 51 பேர் தீக்காயமடைந்தனர். இதில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் லேசான தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்றனர். மேலும் 5 குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயம் ஏற்பட்டு உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகள் உட்பட 15 பேர் லேசான தீக்காயத்துடனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உட்பட 11 பேர் லேசான தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 2 குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயத்துடன் உள் நோயாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஆண்டு பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளில் 38 பேர் சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டு பட்டாசு தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்….