சென்னையில் நாளை மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பரப்புரையை தொடங்கியுள்ளனர். மேலும் தேர்தல் தொடர்பாக நாளை அதிமுக பொதுக்குழு, செயற்குழுகூட்டம் சென்னையில் நடைபெறும் என  கடந்த டிசம்பர் 20-ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது . அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நாளை காலை 8.50 மணிக்கு நடைபெறுகிறது.அந்த கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் வழங்குவது, கூட்டணியை இறுதி செய்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் -ஈபிஎஸ்-க்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்படும் எனறு கூறப்படுகிறது.நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழுகூட்டத்திற்கு பிறகு சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துகொள் உள்ளதா கூறப்படுகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்