சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை – 4 பேர் சரண்

சென்னை: சென்னை அண்ணாநகரில் நேற்றிரவு திமுக நிர்வாகி சம்பத்குமார் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் சரணடைந்துள்ளனர். டி.பி.சத்திரத்தை சேர்ந்த ஹரிகுமார், ஸ்ரீதர், மோகனவேல், நவீன்குமார் ஆகியோர் சரண் அடைந்தனர். அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் சரண் அடைந்த 4 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். பொய் புகார் கொடுத்து தன்னையும், தந்தையையும் சிறைக்கு அனுப்பியதால் வெட்டிக் கொன்றதாக ஹரிகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்பத்குமார் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரகு உள்ளிட்ட இருவருக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது