சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 138.21 மெட்ரிக் டன் பட்டாசு கழிவு அகற்றம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 138.21 மெட்ரிக் டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டுள்ளதாக சென்னனை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கடந்த 3ம் தேதி 5076.53 மெட்ரிக் டன் குப்பை, 559.32 மெட்ரிக் டன்  கட்டிட கழிவு தூய்மை பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. இதில் சுமார் 416 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 145 மெட்ரிக் டன் கட்டிட கழிவு நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. 4ம் தேதி 4312.40 மெட்ரிக் டன் குப்பை, 499.70 மெட்ரிக் டன் கட்டிட கழிவு தூய்மை பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டுள்ளது. இதில் சுமார் 454.64 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 45.06 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவு நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பை மற்றும் கட்டிட கழிவுகள் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்நிலையில்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேகரமாகும் பட்டாசு குப்பை கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டது. அதன்படி, நேற்று பிற்பகல் 12 மணி வரை 138.21 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் தனியாக  சேகரிக்கப்பட்டு  அப்புறப்படுத்தபட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு குப்பை கழிவுகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட்” நிலையத்திற்கு 33 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தொடர்ந்து  பட்டாசு கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலமாக தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தை பேணி காக்கவும் திடக்கழிவு மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் நாள்தோறும் அகற்றப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி திடக்கழிவுகளை அகற்ற  இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள 304 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், 163 காம்பாக்டர் வாகனங்கள், 53 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 21 டிப்பர் லாரிகள் மற்றும் 2,192 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மண்டலம்    4ம் தேதி    5ம் தேதி    மொத்தம்    (மெட்ரிக் டன்)    திருவொற்றியூர்    2.62    3.80    6.42மணலி    0.67    3.15    3.82மாதவரம்    3.21    4.65    7.86தண்டையார்பேட்டை    0.86    7.90    8.75ராயபுரம்    0.23    5.82    6.04திரு.வி.க.நகர்    1.51    4.13    5.64அம்பத்தூர்    2.42    9.18    11.60அண்ணாநகர்    0.20    6.17    6.36தேனாம்பேட்டை    13.43    6.15    19.58கோடம்பாக்கம்          3.50    7.88    11.38வளசரவாக்கம்    8.50    5.50    14ஆலந்தூர்    2.70    5.20    7.90அடையாறு    4.88    10.45    15.33பெருங்குடி    0.92    5.15    6.07சோழிங்கநல்லூர்    2.36    5.10    7.46மொத்தம்    48    90.21    138.21…

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு