சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் 350 மையங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என ஆணையர் பிரகாஷ் தெரிவித்ததுள்ளார். நேற்று வரை 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 10 மருத்துவ குழு, தற்காலிக படுக்கைகள் ஆகியவை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வீடுகளில் பணி செய்ய வருபவர்கள், காவலாளி, ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுனருக்கு அடுத்தகட்டமாக தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார்….