சென்னையில் அதிகபட்சமாக 18 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் 39 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு ஏதும் இல்லை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி 39 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 40க்கும் கீழ் குறைந்துள்ளது. அதைப்போன்று தமிழகத்தில் நேற்றும் சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.மேலும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 30,095 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 322 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,14,443 ஆக உயர்ந்துள்ளது.மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் அதிக பட்சமாக நேற்று சென்னையில் 18 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 23 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்