சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடையில் கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 8ல், நேற்று முன்தினம் இரவு கேட்பாரற்று கிடந்த பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்த நபர் யார், எந்த ரயிலில் வந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து நின்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகப்படும் படியாக இருந்த நபரை போலீசார் சோதனை செய்தபோது, சூட்கேசில் 13 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபுலால் சாகு (43) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். …

Related posts

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

மோசடி வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது