சென்டர் மீடியனில் பைக் மோதி மண்டை உடைந்து வாலிபர் பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பவளக்கார சத்திரத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது, மகன் லட்சுமணபதி (23). இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (எ) செல்வகுமார். நேற்று மாலை லட்சுமணபதி, செல்வகுமார் ஆகியோர் பவளக்கார சத்திரத்தில் இருந்து ஓஎம்ஆர் சாலை வழியாக பூஞ்சேரி கூட்ரோடு நோக்கி பைக்கில் புறப்பட்டனர். பைக்கை, லட்சுமணபதி ஓட்டினார். பூஞ்சேரி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக்அங்குள்ள, சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட லட்சுமணபதி, சென்டர் மீடியனில் மோதி, மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வகுமாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. புகாரின்படிமாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்