சென்டர் மீடியனில் பூச்செடி நடும் பணி

 

அரூர், நவ.21: தர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி வழியாக திருவண்ணாமலைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது, சாலை பணிகள் ஒரு சில இடங்களில் முடிந்துள்ளது.

சாலை பணிகள் முடிவுற்ற பகுதிகளில், சென்டர் மீடியனில் பூச்செடிகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அரூரிலிருந்து மொரப்பூர் வரை சாலை பணிகள் முடிவடைந்துள்ளதால், சென்டர் மீடியனில் அப்பகுதியில் பூச்செடிகள் நடும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு