சென்டர் மீடியனில் டூவீலர் மோதி தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.17: அரூர் அருகேயுள்ள நம்பிபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரி(38), கூலி தொழிலாளி. இவரது மனைவி பொன்மலர். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். வெள்ளிங்கிரி நேற்று முன்தினம், சொந்த வேலை காரணமாக டூவீலரில் நம்பிபட்டியில் இருந்து கோபிநாதம்பட்டி கூட்ரோடுக்கு சென்றார். அரூர்-சேலம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே செல்லும் போது, ரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் டூவீலர் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், கோபிநாதம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை