Monday, July 8, 2024
Home » செஞ்சூரியன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 400 ரன்னுக்கு மேல் எடுத்தால் நன்றாக இருக்கும்; மயங்க் அகர்வால் பேட்டி

செஞ்சூரியன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 400 ரன்னுக்கு மேல் எடுத்தால் நன்றாக இருக்கும்; மயங்க் அகர்வால் பேட்டி

by kannappan

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டி செஞ்சூரியனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன் எடுத்தது. கே.எல்.ராகுல் 122 ரன்னிலும், ரகானே 40 ரன்னிலும் நாட்அவுட்டாக இருந்தனர். மயங்க் அகர்வால் 60 ரன் அடித்தார். கேப்டன் கோஹ்லி 35 ரன்னில் அவுட் ஆனார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் மயங்க்அகர்வால் அளித்த பேட்டி: எப்படி பேட்டிங் செய்வது என்பது குறித்து அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் உரையாடினார். அது உதவியது. முதல் அமர்வில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், உண்மையைச் சொல்வதென்றால், திட்டமானது மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் மற்றும் ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும் பந்துகளை விளையாட முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை பல பந்துகளை விட்டுவிடுவதே திட்டம், நாங்கள் அதைச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் சதம் அடித்ததுதான்  அணியில் ஹைலைட். எங்களிடம் கூட்டு முயற்சி இருந்தது, அது முக்கியமானது. அவர் முதலில் என்னுடன் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பின்னர் விராட் கோஹ்லி, பிறகு ரகானேவுடன் சிறப்பான பார்ட்னர் ஷிப் அமைத்தார். அவர்கள் அதையே தொடருவார்கள் என்று நம்புகிறேன்.கே.எல்.ராகுல் விளையாடிய விதத்திற்காகவும், சில நல்ல பார்ட்னர்ஷிப்களில் அவர் பங்கேற்பதை உறுதி செய்ததற்காகவும் அவருக்கு பாராட்டுக்கள். அவர் தனது ஆஃப்-ஸ்டம்ப் எங்குள்ளது என்பதை உண்மையில் புரிந்துகொண்டு பந்திற்கு ஏற்ப வந்து ஆடுகிறார். அவர் செட் ஆனவுடன் பெரிய இன்னிங்ஸ் ஆடுகிறார்.ஆரம்பத்தில் பிட்ச்சில் ஈரப்பதம் இருந்ததால் கடினமாக இருந்தது. நேரம் ஆக ஆக பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. முடிந்த வரை பேட்டிங் செய்ய வேண்டும். இன்று முதல் ஒரு மணி நேரம் முக்கியமானதாக இருக்கும். நம்மால் முடிந்தால் நிச்சயமாக நல்ல ஸ்கோரை குவிக்கலாம். 400 ரன்னுக்கு மேல் எடுத்தால் நன்றாக இருக்கும், என்றார்….

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi