செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் மாநாடு

செங்கோட்டை,அக்.8: செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைமையிலான மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் ஆரோக்கியசாமி, அந்தோணி சகாய ரூபன், ஆபிலா, தேவி, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் துறைவாரியாக பல்வகை படைப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு அனைத்து படைப்புகளையும் கண்டு மகிழ்ந்து பாராட்டினர். ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்