புழல்: செங்குன்றத்தில் இன்று காலை புழல் ஏரிக்கரை ஓரம், முட்புதர்களுக்கு இடையே வெட்டுக் காயங்களுடன் ஒரு சிறுவனின் சடலம் கிடந்தது. இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். புழல் அருகே செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம், புழல் ஏரிக்கரை ஓரமாக முட்புதருக்குள் இன்று காலை பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு சிறுவன் சடலம் கிடந்தது. செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுவன் செங்குன்றம், நேதாஜி தெருவை சேர்ந்த கோபி என்பவரின் மகன் நாகராஜ் (15) எனத் தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….