செங்கல்பட்டில் கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கண்ணை கட்டிக்கொண்டு மாணவ, மாணவியர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில்  ஏபிஜே அப்துல் கலாம்  7வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்னிந்திய சிலம்பம் விளையாட்டு கழகம் மற்றும் தனியார் சிலம்ப அகாடமி இணைந்து சிலம்பாட்ட கலையில் மாணவர்கள் பங்களிப்பிற்கான உலக சாதனை நிகழ்ச்சி நேற்று  நடைபெற்றது. இதில், 100 மாணவ, மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு சிறிய  வட்டத்திற்குள் தொடர்ந்து 15 நிமிடங்கள் சிலம்பம் சுற்றினர். இதில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் கே. ஆறுமுகம் பங்கேற்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கினார்….

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி