செங்கத்தில் வெறிநாய் கடித்து 10 குழந்தைகள் காயம்

 

செங்கம்: செங்கத்தில் வெறிநாய் கடித்து 10 குழந்தைகள் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் காயிதே மில்லத் தெருவில் நேற்று காலை சிறுவர்கள், சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த வெறிநாய் திடீரென சிறுவர், சிறுமிகள் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்தனர். வலி தாங்க முடியாமல் சிறுவர், சிறுமியர் கதறி அழுதனர். சத்தம் கேட்டு பெற்றோர் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வெறிநாயை விரட்டி அடித்து குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கத்தில் பல்வேறு தெருக்களில் நாய்கள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். எனவே வெறிநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்