செக் மோசடி ஒருவர் கைது

தேனி, ஆக.1: தேனியில் வாங்கிய கடனுக்கு செல்லாத காசோலை வழங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே கொடுவிலார்பட்டி பசுமை நகரை சேர்ந்தவர் அருள்சரவணா (45). இவரிடம், தேனி பாரஸ்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (44) என்பவர் ரூ.4 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். இப்பணத்தை திருப்பி கேட்டதற்கு அவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தும் வகையிலான காசோலையை கொடுத்துள்ளார். இந்த காசோலையை அருள் சரவணா வங்கியில் செலுத்திய போது, இந்த காசோலைக்கு மூன்றாவது நபரிடம் பணம் தர முடியாது என வங்கி திருப்பி அனுப்பியது. இதனையடுத்து அவர் அந்த காசோலையை முருகனிடம் திருப்பி கொடுத்து பணத்தை கேட்டதற்கு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேனி காவல் நிலையத்தில் அருள் சரவணா புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் முருகன் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து