சூலூர் அருகேகார்களில் மூட்டை, மூட்டையாக குட்கா கடத்திய 2 பேர் கைது

சூலூர், ஏப்.9: சூலூர் அருகே 400 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கோவை, சூலூர் அருகே பள்ளபாளையம் பகுதியில் புகையிலை பொருட்களுடன் கார் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூலூர் எஸ்ஐ மாரிமுத்து தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட காரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். அதில், மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தன. விசாரணையில் அவர், ராஜஸ்தானை சேர்ந்த மோகன்லால் (48) என்பது தெரியவந்தது. மேலும், இவர் புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி கடத்தி இந்த பகுதியில்களில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இவரிடம் ஒண்டிப்புதூரை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் (38) என்பவர் மொத்தமாக புகையிலை பொருட்கள் வாங்கி காரில் கடத்திச்செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, கதிர்மில் பகுதியில் அவரை மடக்கிப்பிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் மொத்தம் 400 கிலோ குட்கா மற்றும் 2 காரை பறிமுதல் செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை