சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார்..! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு

டெல்லி: 2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று இந்தியா வந்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார்.  இந்த பேச்சில் இருநாட்டு முக்கிய உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிலையில்  பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி கூறியதாவது: இங்கிலாந்து முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது.  இங்கிலாந்து – இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த போரீஸ் ஜான்சன் பல நடவடிக்கை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: என் கையில் இந்தியன் ஜப் உள்ளது, அது எனக்கு நன்றாக உதவியது. இந்தியாவுக்கு மிக்க நன்றி.  இன்று நாங்கள் அற்புதமான விவாதங்களை நடத்தியுள்ளோம் மற்றும் எல்லா வகையிலும் எங்கள் உறவை பலப்படுத்தியுள்ளோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான கூட்டாண்மை நமது காலத்தின் வரையறுக்கும் நட்புகளில் ஒன்றாகும். உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். உக்ரைனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும்  போர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினோம். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காகன நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க தயார். பாதுகாப்புத்துறையில் இந்தியாவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க விரைந்து ஒப்புதல் வழங்கப்படும். இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தேவை என்றார்….

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் பயணம்: முன்னதாக அசாம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார்

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை