தர்மபுரி, அக்.4: பாப்பாரப்பட்டி எஸ்ஐ மாரி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செக்கோடி பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மோட்டுப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (31), செக்கோடியைச் சேர்ந்த சிவா (27), நவீன்குமார் (28), சுரேஷ் (32), நவீன்குமார் (23), மகேந்திரகுமார் (21), சின்னமாது (44), சின்னசாமி (26) மற்றும் கண்ணன் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் புல்லட் உள்பட 6 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.