சூதாடிய 8 பேர் கைது

 

திருச்சி, மே 30: திருச்சியில் சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து(40), குமார்(62), அமீர்ஜான்(52), இப்ராகிம்ஷா(52), ரவி(46), ராமசாமி(46), ரத்தினம்(59), பாலு(57) ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.3,200ஐ பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு