ஈரோடு, செப்.25: நேற்று முன்தினம் சிறுவலூர் மேடு, டவர் லைன் அருகே சூதாடியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (38), இந்திரன் (26), யுவராஜ் (35), சுரேஷ் (39), வெள்ளிங்கிரி (29), சிவக்குமார் (46), தமிழரசன் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூ.2,600 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.