கிருஷ்ணகிரி, ஜூலை 20: சிங்காரப்பேட்டை எஸ்ஐ நிர்மலா தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மாந்தோப்பில், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (41), திருப்பதி (34), ஹரி பூபதி (39), குமரவேல் (34) ஆகிய 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.