சுவாமிமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

 

கும்பகோணம், ஜன.3: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வழங்கினார். கும்பகோணம் மேற்கு ஒன்றியம், சுவாமிமலை பேரூராட்சியில் உள்ள தேரடி வீதியில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளருமான பம்பப்படையூர் முத்துசெல்வம் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் இரண்டு பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதாரம் மேம்பட உதவிடும் வகையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 888 ஜீவ காருண்யம் சிங்கப்பூர் தொண்டு நிறுவன மேலாளர் கண்ணன், சுவாமிமலை பேரூர் செயலாளர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற பெருந்தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், வழக்கறிஞர் விஜயகுமார், பேரூர் துணைச்செயலாளர் கோபால், பகுதி கழக பொறுப்பாளர் வைக்கம், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் முத்துராஜா, செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி துரை.குணாளன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் லட்சுமிபிரியா கோபால், குணசேகர், ராமமூர்த்தி, பேரூர் வார்டு செயலாளர் நெடுஞ்செழியன், சுவாமிமலை வர்த்தக அணி அமைப்பாளர் சிவக்குமார், இளைஞர் அணி பொறுப்பாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப அணியினர் கார்த்தி, கோபி மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை