Monday, July 1, 2024
Home » சுவரில் டூவீலர் மோதி பள்ளி மாணவர் பலி

சுவரில் டூவீலர் மோதி பள்ளி மாணவர் பலி

by MuthuKumar

ஒட்டன்சத்திரம்: டூவீலர் சுவரில் மோதிய விபத்தில், அதில் சென்ற பள்ளி மாணவர் பரிதாபமாக பலியானார். பழநி எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (19). கார் டிரைவர்.அதே ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் வசந்தகுமார் (16). பள்ளி மாணவர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கரியாம்பட்டியில் நடந்த நிச்சயதார்த்த விழாவுக்கு சென்றனர். அங்கு விழா முடிந்து டூவீலரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, கரியாம்பட்டி கள்ளிமந்தயம் சாலையில் உள்ள அம்மாபட்டி என்னும் இடத்தில் கோயில் சுற்றுச்சுவரில் அவர்கள் சென்ற டூவீலர் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த பார்த்திபனை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து கள்ளிமந்தயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi