சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஏற்காடு, செப்.17: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். 11 மணிக்கு மேல் அதிகளவில் சுற்றுலா பயணிகள் காண முடிந்தது. அவர்கள் ரோஜா தோட்டம், பக்கோடா பாய்ண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் மற்றும் கிளியூர் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர். அண்ணா பூங்காவில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சேர்வராயன் மலைக்கோயிலில் தரிசனம் செய்தும், மகிழ்ந்தனர். தொடர்ந்து ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து இயற்ைக காட்சிகளை கண்டு களித்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்த சுற்றுலா பயணிகளால் பஜ்ஜி கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் சாலையோர கடைகளில் கொய்யா, ஆரஞ்ச் மற்றும் பல்வேறு பழவகைகளை வாங்கி சென்றனர். இன்று அரசு விடுமுறை என்பதால், கூட்டம் இன்றும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி