சுதந்திர தினவிழா நெய்யூர் பேரூராட்சி

திங்கள்சந்தை, ஆக.18: நெய்யூர் பேரூராட்சி அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சகாய மேரி சசிகலா, துணைத் தலைவர் பென் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார். தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இனிப்பும் வழங்கப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகளையும் நட்டனர். விழாவில் கவுன்சிலர்கள் ஜோசப்ராஜ், விசுவாசம், கவிதா ராணி, ராஜகலா உட்பட பேரூராட்சி பணியாளர்கள், கலந்து கொண்டனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு