சுசீந்திரத்தில் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை

சுசீந்திரம், செப்.14: சுசீந்திரம் அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் சுசீந்திரம் கவிமணி நகர் முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன் கவின்(25). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கவின் தனது படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என பெற்றோரிடம் கூறி வந்தாராம். சம்பவத்தன்று அவர் வீட்டின் படுக்கை அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். பெற்றோர் கவினை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார் இதுகுறித்து அவரது தந்தை சுந்தரம் அளித்த புகாாின் போில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி