சுங்கான்கடையில் முதியவர் திடீர் மாயம்

திங்கள்சந்தை, ஆக.28: சுங்கான்கடை திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (70). கடந்த 19ம் தேதி காலை சுங்கான்கடை ஜங்ஷனுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போன அன்று வேட்டி சட்டை அணிந்து இருந்தார். இது குறித்து அவரது மகன் சுரேஷ்(39) இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன முதியவரை தேடி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்