சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஓட்டுநர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், செப்.2: ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் சிஐடியு டாக்ஸி வேன் ஓட்டுனர் சங்கத்தினர் மற்றும் சாலை போக்குவரத்து சங்கத்தினர் இணைந்து ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ங்கவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கணேசன், சிஐடியு கன்வீனர் சுப்பிரமணியம், சாலைப்போக்குவரத்து சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணன், விஜயகுமார் உட்பட வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்