சீர்காழி,செப்.13: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் 38ம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை சீர்காழி சங்கத் தலைவர் தனராஜ் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) திருமுருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனகர், குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார். சங்க கொடியினை மாவட்ட துணை செயலாளர் பொன்.அன்பரசன் ஏற்றி வைத்து சங்க வளர்ச்சிகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்துக்குமார் நன்றி கூறினார்.