Thursday, October 3, 2024
Home » சீனர்கள் விசா முறைகேடு கார்த்தி சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் இன்று உத்தரவு: கைது நடவடிக்கையில் தப்புவாரா?

சீனர்கள் விசா முறைகேடு கார்த்தி சிதம்பரம் வழக்கில் நீதிமன்றம் இன்று உத்தரவு: கைது நடவடிக்கையில் தப்புவாரா?

by kannappan

புதுடெல்லி, : சீனர்கள் விசா முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்ட வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.  கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரையில் பஞ்சாப்பில் இருக்கும் ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலையில் நடந்த பணிக்காக சீனாவில் இருந்து 263 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர, முறைகேடாக விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புதிய வழக்கு செய்துள்ளது. இதையடுத்து, இவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்திய பிறகு, ஆடிட்டர் பாஸ்கர ராமன் சிபிஐ கைது செய்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் மூன்று நாட்கள் கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரனை நடத்தினர். இது தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும், அதுவரையில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என அமலாக்கத் துறைக்கு கடந்த 30ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. இதில், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்று தெரியவரும்….

You may also like

Leave a Comment

two × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi