Monday, July 8, 2024
Home » சீதபற்பநல்லூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 6 பேர் காயம்

சீதபற்பநல்லூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 6 பேர் காயம்

by Karthik Yash

கேடிசி நகர், ஆக.8: நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரை அடுத்த வெள்ளாளன்குளம். இங்கு போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர் அமைப்பது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு பிரிவினர் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால் மற்றொரு பிரிவினர் சமரசத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் போலீசில் புகார் செய்ய போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் வெள்ளாளன்குளம் ராமையா மகன் ஜெயகண்ணன் (20), சந்தானம் மகன் இசக்கிராஜ் (29), பேச்சிமுத்து மகன் ஆறுமுகம் (20), அவரது அண்ணன் கொம்பராஜா (22),சுப்பையா மகன் சங்கர் (24), சுடலைமுத்து மகன் கண்ணன் (19) ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

fifteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi