காரிமங்கலம், ஜூன் 20: காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில், ஆனி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சரவணன், கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர் மற்றும் பலர் செய்திருந்தனர். இதே போல், பெரியாம்பட்டி பசுபதீஸ்வரர் கோயில், அனுமந்தபுரம் சிவன் கோயில் உட்பட பல்வேறு சிவன் கோயில்களில் ஆனிமாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
previous post