சிவகிரி அருகே வாலிபர் தற்கொலை

சிவகிரி, செப்.18: சிவகிரி சிவராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சின்னத்தம்பி (24). சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர் கடந்த 13ம்தேதி சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 15ம்தேதி உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த சின்னத்தம்பி, தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், சகோதரர்களுக்கு முடித்த பின்னர் பார்ப்போம் என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதம்பி தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்