மொடக்குறிச்சி : சிவகிரி அருகே லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்ற கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கந்தசாமிபாளையம், வடக்குவீதி, மதுரை வீரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரவி (42) தூய்மை பணியாளர். இவரது மனைவி கஸ்தூரி (33) இவர்களுக்கு ஹரிசங்கர் (18) என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். ஹரிசங்கர், தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் லேத் பட்டறைக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர், ராஜ்குமார், ஹரிசங்கர் மற்றும் சிலர் கந்தசாமிபாளையத்தில் உள்ள கௌரிசங்கரின் வீட்டில் சிமெண்ட் ஷீட் அமைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஹரி சங்கர் மயங்கி கீழே விழுந்து விட்டதாகவும், உடனடியாக ராஜ்குமார் தனியார் கார் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ஹரிசங்கர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனையடுத்து ஹரிசங்கரின் பெற்றோர்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தனது மகனை வேலைக்கு அழைத்துச் சென்று தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததே அவனது இறப்புக்கு காரணம். இதற்கு காரணமான லேத் உரிமையாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹரிசங்கரின் தந்தை ரவி, சிவகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில், கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் எஸ்ஐ அருள்சாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், லேத் உரிமையாளர் ராஜ்குமாரை உடனடியாக கைது செய்யக்கோரி ஹரிசங்கரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிவகிரி போலீஸ் ஸ்டேஷன் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக, சிவகிரி போலீசார் உறவினர்களை சமரசம் செய்தனர். இச்சம்பவம் சிவகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது….