சிவகிரி அருகே குப்பை கிடங்கில் தீ

சிவகிரி, செப் 21: சிவகிரி அருகே இடுகாட்டுப் பகுதியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குப்பை கிடங்கில் மர்மநபர் தீ வைத்து சென்றதாக தெரிகிறது. தீ வேகமாக பரவி குப்பைக் கிடங்கு முழுவதும் புகைமூட்டமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தீயணைப்பு துறைக்கு தெரிவித்தார். இதையடுத்துது வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் கருப்பையா, (போக்குவரத்து) முருகன் அங்கு சென்று தீயை அணைத்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி