சிவகிரியில் ரூ.25 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

 

மொடக்குறிச்சி,ஆக.30: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,203 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.61.79 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.72.32 காசுக்கும், சராசரி விலையாக ரூ.68.20 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 38 ஆயிரத்து 661 கிலோ எடையுள்ள நிலக்கடலை ரூ.25 லட்சத்துக்கு விற்பனையானது.

 

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்