சிவகாசியில் 3 சிறுவர்கள் மாயம்

 

சிவகாசி, அக்.21: சிவகாசியில் மூன்று சிறுவர்கள் திடீரென மாயமாகினர். சிவகாசியில் திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டில் கடந்த 18ம் தேதி இரவு இவரது தம்பி கருப்பசாமி(17) மற்றும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாண்டி மகன் முருகன் (16), ராஜேந்திரன் மகன் மருதமலை (15) ஆகிய மூன்று சிறுவர்களும் தூங்கச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் காலையில் மாடிக்கு சென்று பார்த்த போது 3 சிறுவர்களும் காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். அங்கும் வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் தேடி வருகின்றனர். சிவகாசியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 பள்ளி மாணவர்கள் மாயமான நிலையில் 2 நாட்கள் கழித்து அவர்களாகவே வீடு திரும்பினர் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை