சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 8: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாவிற்கான விடுதிகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாட்டத்தில் தமிழக அரசு சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா தலங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில் உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி, சாகச சுற்றுலா நடத்துபவர்கள் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர் தமிழ்நாடு சுற்றுலா துறையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி http:tntourismtours.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகக்கப்பட்டதும் பதிவு சான்றிதழை இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு