சிவகங்கை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்

சிவகங்கை, மே 31: சிவகங்கை மாவட்டநிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பணிசெய்யும் போது பணியிடத்தில் விபத்தினால் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுமான துறையில் ஈடுபடும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை நல வாரியத்தில் பதிவு செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

எனவே, ஒப்பந்ததாரர்கள் உரிமம் பெறும் பொழுதே கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்கள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பின்னரே நலத்திட்ட உதவிகள் பெற இயலும். கட்டுமான தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பதிவு செய்யவும் மற்றும் கூடுதல் விபரம் அறியவும் சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்