சிவகங்கை தொகுதியை மீண்டும் தக்க வைத்த காங்கிரஸ்

 

சிவகங்கை, ஜூன் 5: சிவகங்கை தொகுதியில் ஏற்கனவே நடந்த 13 தேர்தல்களில் இரண்டு முறை திமுக, இரண்டு முறை அதிமுகவும் வெற்றி பெற்றன. மற்ற அனைத்து தேர்தல்களிலும் 7முறை காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸில் இருந்து பிரிந்து சில வருடம் இருந்த த.மா.கா இரு முறையும் வெற்றி பெற்றன.

1980ல் தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி(தமாகா உட்பட) 2014வரை தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை மக்களவை தொகுதியில் 37ஆண்டிற்கு பிறகு அதிமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி சிவகங்கை தொகுதியை கைப்பற்றிய நிலையில் மீண்டும் தற்போது இதே கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்